For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

’கேப்டன்’ விஜயகாந்த் மறைவு - தொண்டர்கள் மொட்டை அடித்து அஞ்சலி!

06:15 PM Dec 28, 2023 IST | Web Editor
’கேப்டன்’ விஜயகாந்த் மறைவு   தொண்டர்கள் மொட்டை அடித்து அஞ்சலி
Advertisement

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி மதுரை, திருநெல்வேலி மாவட்ட  தேமுதிக தொண்டர்கள் மொட்டை அடித்து, ஒப்பாரி பாடல் பாடி அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

தேமுதிக நிறுவனரும்,  நடிகருமான கேப்டன் விஜயக்காந்த் உடல்நலக்குறைவு காரணமாக
உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில்
பலரும் அவருக்கு நேரில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.  தமிழ்நாடு முழுவதும்
உள்ள அவரது ஆதரவாளர்கள் மற்றும் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் என அனைவரும் அவரது திருஉருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அவரது உடல் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செய்யாமல் சென்னையில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. இந்நிலையில், மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த தேமுதிக தொண்டர்கள் மொட்டை அடித்து, துக்க பாட்டு பாடி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் திருநெல்வேலி  மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள பரமேஸ்வரபுரத்தை சேர்ந்த தேமுதிக மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், கிளைச் செயலாளர் கண்ணன், தொண்டர்கள் பிரபாகரன், கிருஷ்ணன் ஆகியோரும் மொட்டையடித்து தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement