ஹிந்தியை மட்டும் படித்தால் மற்ற நாடுகளுக்கு செல்ல முடியுமா? சீமான் கேள்வி!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை விமான நிலையத்திலிருந்து மதுரை புறப்பட்டார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,
"பாஜகவினர் முருகன் மாநாட்டை திட்டமிட்டு செய்கின்றனர்.
இந்து அமைப்புகள் தனித்தனியாக இல்லை அனைத்தும் பாஜகவின் கிளை அமைப்புகள் தான், அவர்கள் முதலில் விநாயகரை தான் தூக்கிக் கொண்டு வந்தனர். தமிழ்நாட்டில் அது வேலையாகவில்லை என்பதால் இங்கு முருகனை கையில் எடுத்து உள்ளனர். அதேபோல் வட இந்தியாவில் ராமரை கையில் எடுத்து இருக்கின்றனர்.
ஆனால் அயோத்தி தொகுதியில் பாஜக தோல்வி அடைந்ததால் அது அங்கு எடுபடவில்லை, அதேபோல் கேரளாவில் நுழைவதற்கு ஐயப்பனை கையில் எடுத்தார்கள், அதுவும் அவர்களுக்கு கை கொடுக்கவில்லை, பாஜக மக்களுக்கான பிரச்சினையை சரி செய்வதில்லை பிரச்சனையை கொடுப்பதே இவர்களாக தான் இருக்கிறார்கள்.
அதேபோல் திருவள்ளுவருக்கு காவியை கட்டி பார்த்தார்கள் அதுவும் அவர்களுக்கு எடுபடவில்லை, தற்போது தமிழர் இறையான முருகரை தொட்டுப் பார்க்கிறார்கள். எனது தேசிய விடுதலைப் பயணத்தில் மொழி, இனம், கலை, இலக்கியம், பண்பாடு உள்ளிட்ட அனைத்தையும் மீட்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் பாஜக இந்து அமைப்புகள் முருகனைத் தொடாமல் தற்போது ஏன் தொட வேண்டும், திருப்பரங்குன்றம் மலை மேல் ஏற்பட்ட சிக்கலை கையில் எடுத்து உள்ளனர்.
நாட்டின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்து மக்கள் ஒற்றுமை குறித்து பேசுகிறார். இதனால் மக்களை மதங்களால் பிளவுபடுத்தப்பட்டு, கூறு போடுபவர்கள் யார் என்ற கேள்வி எழுகிறது. இதனால் இந்து நாடுகளுடன் மட்டும் தான் இந்தியாவிற்கு தொடர்பு மற்ற நாடுகளுடன் தொடர்பு இல்லை என்று இந்திய அரசால் அறிவிக்க முடியுமா கேள்வி எழுப்பினார்.
மற்ற நாடுகளில் இந்து கோயில்களை கட்டி வழிபட அந்த நாட்டு அரசு அனுமதிக்கின்றனர் இங்கு ஏன் அதற்க்கு அனுமதியில்லை, ஆர்.எஸ்.எஸ் இயக்கம் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இருக்கிறது, பாஜக ஆட்சி அமைத்து 12 ஆண்டுகள் கடந்துள்ளது இதுவரை அவர்கள் முருகனை வழிபடாமல் தற்போது ஏன் தொடுகிறார்கள்,
பாஜகவினர் என்னதான் மாநாடு போட்டாலும் எங்கள் இறை பழனிச்சாமியை கும்பிட்டு விட்டு, ஐயா பழனிச்சாமிக்கு பின்னாடி தான் நிற்க வேண்டும், தமிழர் கடவுள் முருகனுக்கு தமிழில் மந்திரம் ஓத வேண்டும் தமிழில் திருப்புகழ் பாட வேண்டும் என இந்த மாநாடு வலியுறுத்துமா? ஆங்கிலத்தை விட்டுவிட்டு ஹிந்தியை மட்டும் படித்தால் மற்ற நாடுகளுக்கு செல்ல முடியுமா? அனைத்து மொழியையும் அழித்துவிட்டு ஒரே மொழியை நிலை நாட்ட வேண்டும் என்று நினைப்பது நாட்டிம் ஒருமைப்பாட்டுக்கும் தேச ஒற்றுமைக்கும் இது
ஏற்புடையது இல்லை,
மூன்றாம் உலகப்போர் நீர் வேட்டைக்காக நடக்கும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பு, எண்ணைக்காக தற்போது நாடுகளுக்கு இடையே போர் நடக்கிறது. எங்களுடைய தலைவன் தமிழீழ விடுதலைக்காக கட்டி எழுப்பிய விடுதலைப் புலிகள் என்னும் ராணுவத்தை வீழ்த்துவதற்கு 22 நாடுகளின் துணைக் கொண்டுதான் இறுதிப் போரில் புலிகளை வீழ்த்தினோம் என்று அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
22 நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்தியதால் இதுவும் உலகப்போர் தான், எனவே நாங்கள் மூன்றாம் உலகப்போரை எதிர்கொண்ட மக்கள், தற்போது வளம் மிக்க நாடுகளை வேட்டையாடி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து வளங்களை சுரண்டு அதற்கு தான் இந்த போர், அமெரிக்கா தன்னிச்சையாக இதில் கால்
ஊன்ற கூடாது, என ரஷ்யா போருக்கு வரும், வல்லாதிக்க நாடுகளின் அழகே எளிய நாடுகளின் துணையாக நிற்பது தான் ஆனால் தற்பொழுது வல்லாதிக்க நாடுகள் எளிய நாடுகளை வேட்டையாடி அழிக்கிறது.
அதேபோல் இந்திய நாடு தமிழ்நாட்டில் இருந்து மீத்தேன் ஈத்தேன் நிலக்கரி உள்ளிட்ட வளங்களை வேட்டையாடி கொண்டு செல்கிறது. எங்கள் சொந்த நாட்டில் எங்கள் வளங்களுக்காக எங்கள் வாழ்விடத்தை இழந்து விட்டு அகதியாக அலைந்து கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.