For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அனைத்து வழித்தடங்களிலும் முழுமையாக பேருந்துகள் இயக்கம்..! - அமைச்சர் சிவசங்கர் தகவல்

01:00 PM Jan 09, 2024 IST | Jeni
அனைத்து வழித்தடங்களிலும் முழுமையாக பேருந்துகள் இயக்கம்      அமைச்சர் சிவசங்கர் தகவல்
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, அரசுப் பேருந்துகளில் பொதுமக்கள் அச்சமில்லாமல் பயணம் செய்ய ஏதுவாக, உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் அனைத்து வழித்தடங்களிலும் முழுமையாக இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :

“தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் பாதுகாப்பாகவும், அச்சமின்றியும் பேருந்துகளில் பயணம் செய்ய ஏதுவாக, முழுமையாக பேருந்துகளை இயக்கிட உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் அனைத்து வழித்தடங்களிலும் முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது.

மேலும், இப்பேருந்துகள் இயக்கம் தொடர்பாக, கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலும், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

ஜனவரி 09-ம் தேதி காலை 11.00 மணி நிலவரப்படி,எனவே, பயணிகள் எந்தவித அச்சமின்றி, பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்ள அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் இயக்கத்தினை அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் அனைத்து போக்குவரத்துக் கழக பணியாளர்கள் முழுமையாக கண்காணித்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.”

இவ்வாறு போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement