For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பானி பூரி சாப்பிட்ட சகோதரர்கள் உயிரிழப்பு - ஆந்திராவில் அதிர்ச்சி..!

11:20 AM Jan 26, 2024 IST | Web Editor
பானி பூரி சாப்பிட்ட சகோதரர்கள் உயிரிழப்பு   ஆந்திராவில் அதிர்ச்சி
Advertisement

ஆந்திராவில் பானி பூரி சாப்பிட்ட 2 சிறுவர்கள் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisement

ஆந்திர மாநிலம், ஜங்கா ரெட்டி கூடத்தை சேர்ந்த சகோதர்களான ராமகிருஷ்ணா (10) மற்றும் விஜய் (6), நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள கடையில் பானி பூரி சாப்பிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன.

இதனால் குடும்பத்தினர் அவர்களை உடனடியாக ஜங்கார ரெட்டி கூடத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இரண்டு சிறுவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையும் படியுங்கள்: கோவையை சேர்ந்த வள்ளி ஒயிற்கும்மி ஆசிரியர் பத்திரப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு.!

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
Advertisement