For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தலையில் துப்பாக்கி தோட்டாவுடன் 4 நாட்களாக நடமாடிய பிரேசில் இளைஞர்..!

10:02 PM Jan 24, 2024 IST | Web Editor
தலையில் துப்பாக்கி தோட்டாவுடன் 4 நாட்களாக நடமாடிய பிரேசில் இளைஞர்
Advertisement

பிரேசில்  நாட்டை சேர்ந்த மேடியஸ் பேசியா என்ற இளைஞரின் தலையில் குண்டு பாய்ந்தது தெரியாமல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்திருக்கிறார்.

Advertisement

பிரேசில் நாட்டை சேர்ந்த மேடியஸ் பேசியா என்ற இளைஞர் (21) மருத்துவம் பயின்று வருகிறார். இவர் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அங்குள்ள ஒரு கடற்கரையில் தனது நண்பர்களுடன் சுற்றி பார்க்க சென்று உள்ளார். அப்போது தன்னை யாரோ கல்லால் தாக்கியது போன்று உணர்ந்துள்ளார்.

சிறிது நேரத்தில் தலையில் இருந்து ரத்தமும் வந்தது.உடனே ரத்தம் வந்த இடத்தில் சில ஐஸ்கட்டிகளை மட்டும் வைத்துக் கொண்டு புத்தாண்டு கொண்டாட சென்றார். ஆனால் 4 நாட்களுக்கு பிறகு தனது வீட்டிற்கு திரும்பும் போது இவரது கையில் கடுமையான வலியை உணர்ந்தார்.

இதையும் படியுங்கள்;ஒரு கொலையை மறைக்க இத்தனை கொலைகளா..? – தென்ஆப்பிரிக்காவில் நடந்த கொடூரம்..!

பின்னர், மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த போது இவரது தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து டாக்டர்கள் 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து இவரது தலையில் இருந்த 9 மி.மீ. துப்பாக்கி குண்டை அகற்றினர். இதுதொடர்பாக போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மேடியஸ் பேசியா கூறுகையில், "சம்பவத்தன்று யாரோ சிறிய கல்லால் அடித்திருக்கலாம் என நினைத்தேன். ஆனால் தலையில் துப்பாக்கி குண்டு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அன்று துப்பாக்கி சுடும் சத்தம் கூட கேட்கவில்லை. மூளையில் குண்டு இருந்ததால் கையை அசைக்க முடியாமல் போனது. எனவே ஆஸ்பத்திரிக்கு சென்ற போது தான் தலையில் குண்டு இருந்தது தெரிய வந்தது" என்றார்.

Tags :
Advertisement