Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆணவக் கொலைகளுக்கு ஆதரவான ஒரே கட்சி பாஜக - மாணிக்கம் தாகூர் பகீர் குற்றச்சாட்டு!

ஆணவக் கொலைகளுக்கு ஆதரவான ஒரே கட்சி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
03:06 PM Aug 28, 2025 IST | Web Editor
ஆணவக் கொலைகளுக்கு ஆதரவான ஒரே கட்சி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
Advertisement

 

Advertisement

விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார் தில்,

ராகுல் காந்தியின் பீகார் யாத்திரையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றது மிக முக்கியமானது என மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டார்.

"சொந்த மக்களின் வாக்குகளைத் திருடி தேர்தலில் வெற்றி பெறுவது பயங்கரவாதத்திற்குச் சமம்" என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டதை அவர் சுட்டிக்காட்டினார். குஜராத் மாதிரி (Gujarat model) என்பது பாஜகவினருக்கு ஐந்து வாக்குகள், மற்றவர்களுக்கு ஒரு வாக்கு என்ற முறையில் இயங்கி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

பீகாரில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கி தேர்தலை நடத்த பாஜக திட்டமிட்ட சதியை ராகுல் காந்தி முறியடித்ததாக அவர் தெரிவித்தார். தேர்தல் ஆணையம், பாஜகவின் வெற்றிக்கு உதவுவதாக மாறியுள்ளது என்றும், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் ஞானேஷ்வர் குப்தா ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருந்து தேர்தல் ஆணையம் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதனை தொடர்ந்து அதிமுகவை ஆர்எஸ்எஸ் வழிநடத்துவது தவறு இல்லை என மத்திய அமைச்சர் எல். முருகன் கூறிய கருத்து குறித்து மாணிக்கம் தாகூர் பதிலளித்தார். எல். முருகனின் கருத்து ஆர்எஸ்எஸ்-ன் கட்டுப்பாட்டில் அதிமுக இருப்பதை உறுதி செய்வதாக அவர் கூறினார். எம்.ஜி.ஆர். தொடங்கிய அதிமுக, தற்போது அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆர்எஸ்எஸ்-ன் துணை அமைப்பாக மாறிவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இரட்டை இலை சின்னம் மட்டுமே அதிமுகவினரின் கையில் உள்ளது என்றும், கட்சி முழுவதுமாக ஆர்எஸ்எஸ் கைக்கு சென்று விட்டது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். அதிமுகவின் அனைத்து முடிவுகளையும் நாக்பூர் எடுக்கும் காலம் தொலைவில் இல்லை என்றும் அவர் கூறினார்.

மேலும் பீகார் பயணத்திற்குப் பிறகாவது ஸ்டாலின் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியது குறித்து மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பினார்.

ராகுல் காந்தி இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கூறியபோது, அன்புமணி ஏன் மோடியிடம் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தவில்லை என அவர் கேட்டார். மருத்துவக் கல்லூரி இட ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அன்புமணி மீதுள்ள சிபிஐ வழக்குகளுக்குப் பயந்துதான் அவர் அமைதியாக இருந்தாரா என்றும் வினவினார்.

பீகாரில் நிதீஷ் குமார் நடத்திய சாதிவாரி கணக்கெடுப்பு எந்தப் பயனும் இல்லாத ஏமாற்று வேலை என்றும், அதை நீதிமன்றம் நிராகரித்து விட்டது என்றும் அவர் தெரிவித்தார். சமூகநீதியை அன்புமணியும் அவரது தந்தையும் ராமதாஸிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆணவக் கொலைகள் குறித்து முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வலுவான கருத்தைக் கூறாதது ஏன் என்ற கேள்விக்கு மாணிக்கம் தாகூர் பதிலளித்தார்.

காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் பாஜக அலுவலகத்திற்கு வரலாம் என அண்ணாமலை கூறியது குறித்து, அவருக்கு கட்சியிலிருந்து அலுவலகமே ஒதுக்கப்படவில்லை என்றும், முதலில் அலுவலகம் கொடுக்கட்டும், பிறகு மக்கள் வரட்டும் என்றும் அவர் கிண்டலாகப் பேசினார்.

ஆணவக் கொலைகளுக்கு ஆதரவான ஒரே கட்சி பாஜக என அவர் குற்றம் சாட்டினார். மேலும், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ன் சித்தாந்தம் ஆணவக் கொலைகளையும் தற்கொலைகளையும் அதிகரிக்கக் கூடியது என்றும், கொலை செய்பவர்களைக் காக்கும் அமைப்பாகவும் அவர்கள் செயல்படுகிறார்கள் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

Tags :
ADMKAnnamalaiDMKhonourkillingRahulGandhiRSSvirdhunagar
Advertisement
Next Article