Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மகளிர் உரிமைத் தொகை குறித்து விமர்சித்த குஷ்பு - திமுக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்!

03:19 PM Mar 13, 2024 IST | Web Editor
Advertisement

மகளிர் உரிமைத்தொகை குறித்து விமர்சித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜகவை பிரமுகருமான நடிகை குஷ்புவை கண்டித்து தமிழ்நாட்டின் பல இடங்களில் திமுக மகளிரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Advertisement

சென்னை செங்குன்றத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் நடிகையும்,  தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கலந்து கொண்டார்.   ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு, தாய்மார்களுக்கு 1000 ரூபாய் பிச்சை போட்டால் அவர்கள் திமுகவுக்கு வாக்களித்து விடுவார்களா? என கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து,  குஷ்புவின் இந்த பேச்சு சர்ச்சைக்குள்ளானது.  இதற்கு பலர் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.  குஷ்புவின் சர்ச்சைக்குறிய பேச்சிற்கு திமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு கடும் கண்டனம் தெரிவித்து காணொலி ஒன்றை வெளியிட்டார்.

இதையும் படியுங்கள் : பெங்களூரு “ரமேஸ்வரம் கபே” குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் விசாரணையைத் தொடங்கிய NIA!

இந்நிலையில் குஷ்புவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் திமுக மகளிர் அணியினர் இன்று ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.  சிவகங்கையில் அரண்மனை வாசல் பகுதியில் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குஷ்புவை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்.

குஷ்புவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தேனியில் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக மகளிர் அணி கலந்து கொண்டு குஷ்புவை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்.

இதே போல், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் குஷ்புவை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

Tags :
BJPDMKkalaingar magalir urimai thogaiKushbooProtestsivagangaiTamilNaduTheniWomens'Wing
Advertisement
Next Article