For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா! மத்திய அரசு அறிவிப்பு!

10:01 PM Jan 23, 2024 IST | Web Editor
பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா  மத்திய அரசு அறிவிப்பு
Advertisement

பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாகூருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது  அறிவித்துள்ளது.

Advertisement

இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது பாரத ரத்னா. தங்களின் துறையில் உயரிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது. அரசியல், கலை, இலக்கியம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள், சமூக சேவகர்கள் போன்றோருக்கு பாரத ரத்னா வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாகூருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. மறைவுக்கு பின் கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் பிரச்சினைகளுக்காக போராடிய கர்பூரி தாகூர், பீகாரில் இருமுறை முதலமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement