விஷ்ணுபுரம் சரவணனுக்கு ‘பால புரஸ்கார்’, லட்சுமிஹருக்கு ‘யுவ புரஸ்கார்’ - சாகித்ய அகாடமி அறிவிப்பு!
சிறந்த இலக்கிய படைப்பாளிக்களுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசு சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் மற்றும் பால சாகித்ய புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த குழந்தைகளுக்கான இலக்கியப் படைப்புகளுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருதும், 35 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருதுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இதில் ‘ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற தமிழ் புதினத்துக்காக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு 'பால சாகித்ய புரஸ்கார்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் 'கூத்தொன்று கூடிற்று' என்ற சிறுகதை தொகுப்புக்காக மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் லட்சுமிஹர்-க்கு சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.