ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்னில் ஏவப்படும் பாகுபலி ராக்கெட்!
இந்திய ராணுவத்திற்காக அடுத்த வாரம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஒரு சிறப்பு தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள், 'சி.எம்.எஸ்-03' என்று அழைக்கப்படுகிறது.
வருகின்ற 2 ம் தேதி பாகுபலி என்று செல்லமாக அழைக்கப்படும் 'எல்.வி.எம்-3' ராக்கெட் மூலம் 4 ஆயிரத்து 400 கிலோ எடை கொண்ட ‘ஜிசாட்-7 ஆர்' என்று அழைக்கப்படும் ‘சி.எம்.எஸ்-03' என்ற ராணுவ தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட் முழுமையாக ஒன்று சேர்க்கப்பட்டு செயற்கைக்கோளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஏவுதளத்திற்கு முந்தைய நடவடிக்கைகளாக ராக்கெட் கடந்த 26ம் தேதி ஏவுதளத்திற்கு நகர்த்தப்பட்டு உள்ளது. இதற்கான இறுதிகட்டப்பணியான ‘கவுண்ட்டவுன்’ வருகிற 1ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலேயும் இது இந்திய நிலப்பரப்பு உட்பட பரந்த கடல் பகுதியிலும் சேவைகளை வழங்கும் என்று கூறப்படுகிறது.