For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சிறப்பாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - முதல் 3 பரிசுகளை பெற்ற வீரர்கள்!

05:55 PM Jan 15, 2024 IST | Web Editor
சிறப்பாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு   முதல் 3 பரிசுகளை பெற்ற வீரர்கள்
Advertisement

விறுவிறுப்பாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில், முதல், இரண்டாம் மற்றும் 3ம் இடத்தை பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement

உலக புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. அமைச்சர் மூர்த்தி, திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மாநகராட்சி ஆணையர் மதுபாலன் என பலர் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில், மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதல் சுற்றில் மஞ்சள் நிற உடையணிந்து வீரர்கள் களமிறங்கினர். அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி 5.15 மணிக்கு நடந்து முடிந்தது. சுற்றுக்கு 100 மாடுகளும், 50 வீரர்களும் களமிறங்கியது. வாடிவாசலில் சீறிய காளைகளை காளையர்கள் தீரத்துடன் அடக்கினர். சில காளைகள் யாரும் தொட முடியாத வகையில் வாடிவாசலில் நின்று விளையாடும் காட்சி காண்போரை மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் இருந்தது. 

Imageமொத்தம் 817 காளைகள் கலந்துகொண்டன. மேலும் 400 வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் 17 காளைகளை பிடித்து மதுரை அவனியாபுரம் கார்த்திக் முதலிடத்தை பிடித்தார். 2022-ம் ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 24 காளைகளை பிடித்து கார்த்திக் முதலிடம் பிடித்து சொகுசு காரை பரிசாக பெற்றது குறிப்பித்தக்கது.

தொடர்ந்து 13 காளைகளை பிடித்து மதுரை அவனியாபுரம் மாரியப்பன் ரஞ்சித் இரண்டாம் இடத்தை பிடித்தார். 9 காளைகளை பிடித்து சிவகங்கை திருப்புவனம் முரளிதரன் முன்றாம் இடத்தை பிடித்தார். 9 காளைகளை பிடித்து தேனி முத்துகிருஷ்ணன் முன்றாம் இடத்தை பிடித்தார்.

Tags :
Advertisement