ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்த இலங்கை!
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்க்கு 281 ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு 282 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக குசல் மெண்டில் 101 ரன்களும், சரித் அசலங்கா 78 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 24.2 ஒவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 107 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன்மூலம் 174 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்ற இலங்கை தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக ஸ்டீவ் சுமித் 29 ரன்கள் அடித்தார். அபாரமாக பந்து வீசிய இலங்கை தரப்பில் துனித் வெல்லலகே 4 விக்கெட்டுகளும், அசிதா பெர்னண்டோ மற்றும் வனிந்து ஹசரங்கா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தினர்.