For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பயணிகள் கவனத்திற்கு... #Madurai வழியாக செல்லும் ரயில் சேவைகள் இன்று முதல் மாற்றம்!

07:36 AM Sep 18, 2024 IST | Web Editor
பயணிகள் கவனத்திற்கு     madurai வழியாக செல்லும் ரயில் சேவைகள் இன்று முதல் மாற்றம்
Advertisement

பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை ரயில்வே கோட்டத்தில் இருந்து இயக்கப்படும், ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

மதுரை ரயில்வே கோட்டத்தில் கூடல்நகர்- சமயநல்லூர், மதுரை - கூடல்நகர், மதுரை - திண்டுக்கல் தடத்தில் பொறியியல் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளதால், இன்று (செப். 18) முதல் அக்.8-ம் தேதி வரை இத்தடத்திலான ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுதியாக ரத்து:

ஈரோட்டிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் ஈரோடு- செங்கோட்டை விரைவு ரயில் (16845) செப். 18-ம் தேதி முதல் அக். 7-ம் தேதி வரை (செப். 24, அக்.1 தவிர) திண்டுக்கல்லில் நிறுத்தப்படும். திண்டுக்கல் - செங்கோட்டை சேவை ரத்து செய்யப்பட்டிருக்கும்.

மறுமார்க்கத்தில், செங்கோட்டையிலிருந்து காலை 5 மணிக்குப் புறப்படும் செங்கோட்டை - ஈரோடு விரைவு ரயில் (16846) செப். 19-ம் தேதி முதல் அக். 8-ம் தேதி வரை (செப். 25, அக். 2 தவிர) திண்டுக்கலில் இருந்து காலை 11.15 மணிக்கு புறப்பட்டு, ஈரோடு செல்லும்.

மாற்றுப் பாதையில்:

செங்கோட்டையிலிருந்து காலை 7.05 மணிக்குப் புறப்படும் செங்கோட்டை- மயிலாடுதுறை பயணிகள் விரைவு ரயில் (16848) செப். 19 முதல் அக். 7 வரை (செப். 25, அக். 2 தவிர) கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை வழியே செல்வதற்கு பதிலாக, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியே இயக்கப்படும்.

குருவாயூரிருந்து இரவு 11.15 மணிக்குப் புறப்படும் குருவாயூர் - சென்னை விரைவு ரயில் (16128) செப். 23, 25, 26, 27, அக். 2, 3 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியே இயக்கப்படும்.

நாகர்கோவிலிருந்து காலை 6.15 மணிக்குப் புறப்படும் நாகர்கோவில்- மும்பை விரைவு ரயில் (16352) செப். 26, அக். 3 ஆகிய தேதிகளிலும், கன்னியாகுமரியிலிருந்து காலை 5.50 மணிக்குப் புறப்படும் கன்னியாகுமரி- ஹௌரா அதிவிரைவு ரயில் (12666) செப். 28-ஆம் தேதியும் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி,திருச்சி வழியே இயக்கப்படும்.

நாகர்கோவிலிலிருந்து காலை 9.15 மணிக்குப் புறப்படும் நாகர்கோவில் - கச்சேகுடா விரைவு ரயில் (16354) செப். 28-ஆம் தேதி திண்டுக்கல், கரூர் வழியே இயக்கப்படும். மதுரையிலிருந்து காலை 11.55 மணிக்குப் புறப்படும் மதுரை- பிகானர் விரைவு ரயில் (22631) செப். 26, அக். 3 ஆகிய தேதிகளில் மதுரை, மானாமதுரை, காரைக்குடி வழியே இயக்கப்படும்.

Tags :
Advertisement