For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தீபாவளி பண்டிகையை மலைவாழ் மக்களுடன் கொண்டாடிய சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன்!

05:08 PM Nov 12, 2023 IST | Student Reporter
தீபாவளி பண்டிகையை மலைவாழ் மக்களுடன் கொண்டாடிய சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன்
Advertisement

தீபாவளி பண்டிகையை சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மலைவாழ் மக்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Advertisement

நாடு முழுவதும் புத்தாடை அணிந்தும்,  இனிப்புகள் வழங்கியும்,  பட்டாசு வெடித்தும் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குறிஞ்சி நகர் பகுதியில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.   இப்பகுதியில் சுமார் 70 குடும்பங்கள் உள்ளன.  இந்நிலையில் அதிமுகவைச் சேர்ந்த உசிலம்பட்டி  சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தனது மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து குறிஞ்சி நகர் பகுதிக்கு தீபாவளியை கொண்டாட சென்றார்.

இதையும் படியுங்கள்:  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு!

அங்கு குறிஞ்சி நகரில் உள்ள மலைவாழ் மக்களுக்கு  புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் பட்டாசுளை வழங்கினார்.  பின்னர் மலைவாழ் மக்களின் குழந்தைகளுடன் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Tags :
Advertisement