For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கார்த்தியை ‘பருத்திவீரன்’ போன்று ஒரு படம் நடிக்க சொல்லுங்கள்.. சினிமாவை விட்டே போகிறேன்” - நடிகர் ‘கஞ்சா கருப்பு’ ஆவேசம்!

11:25 AM Dec 02, 2023 IST | Web Editor
கார்த்தியை ‘பருத்திவீரன்’ போன்று ஒரு படம் நடிக்க சொல்லுங்கள்   சினிமாவை விட்டே போகிறேன்”   நடிகர் ‘கஞ்சா கருப்பு’ ஆவேசம்
Advertisement

பருத்திவீரன் படத்தை பெரிய படமாக்கியது அமீர் தான் எனவும், கார்த்தியை அந்த படம் மாதிரி ஒரு படம் பண்ண சொல்லுங்கள். நான் சினிமாவை விட்டே போகிறேன் எனவும் நடிகர் கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளார்.

Advertisement

பருத்திவீரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அத்திரைப்படத்தை இயக்கிய அமீர் தன்னை ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இது சமூக வலைதள பக்கங்களில் பேசுபொருளானது. இதற்கு மறுப்பு தெரிவித்து இயக்குநர் அமீர் அறிக்கை வெளியிட்டிருந்தார். 

இதனைத் தொடர்ந்து பருத்தி வீரன் திரைப்படம் உருவாக பண உதவியளித்த இயக்குநர் சசிகுமாரும் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.  இதனைத் தொடர்ந்து இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி, இயக்குநர் பாரதிராஜா, கரு.பழனியப்பன், கவிஞர் சினேகன், சேரன் உள்ளிட்டோர் அமீருக்கு ஆதரவாக  குரல் கொடுத்தனர். ஆனால் நடிகர் சூர்யா, கார்த்தி உள்ளிட்ட படம் வெளியான நேரத்தில் அமீரின் உடன் இருந்தவர்கள் சிலர் அவருக்கு ஆதரவாக எதுவும் கூறவில்லை என சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது.

இந்நிலையில் அப்படத்தில் டக்ளஸ் கதாபாத்திரத்தில் நடித்த கஞ்சா கருப்பு சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடந்த சம்பவம் தொடர்பாக பேசியுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் கார்த்தியை யாருக்கு தெரியும்.  அமீர் என்பவர் படம் பண்ணியதால் தான் அவரை எல்லாருக்கும் தெரியும். 30 நாட்கள் வெயிலிலும், மழையிலும் நிற்க வைத்து அந்த கதாபாத்திரத்தை உருவாக்கியவர் அமீர் தான்.  பருத்திவீரன் படத்தில் இடம் பெற்ற அத்தனை கேரக்டர்களும் ஞானவேல்ராஜாவை நம்பி வந்தவர்கள் அல்ல. அமீருக்காக தான் வந்தார்கள்.

பருத்திவீரன் படத்தால் எந்த வகையில் நஷ்டம் என சொல்கிறீர்கள்? அமீரின் நண்பர்கள், தெரிந்தவர்கள் தான் பணம் கொடுத்து உதவினார்கள். படம் எடுத்தவர்கள் என்னால் படம் பண்ண முடியவில்லை,  தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கூறிவிட்டு சென்றிருக்கலாமே. ஏன் செய்யவில்லை?. அமீர் எப்படி பொய் கணக்கு காட்டப் போகிறார். ரம்ஜான் நோன்பு காலத்தில் கூட படப்பிடிப்பில் தான் இருந்தார். ஒரு இஸ்லாமியர் எப்படி பொய் சொல்வார். சிவகுமார் அமீரிடம் கார்த்தியை ஒப்படைத்தது உண்மை தான். 

இன்றைக்கு கார்த்தி, சூர்யா எல்லாம் எத்தனை கோடி சம்பளம் வாங்குகிறார்கள். அதில் ஒரு கோடி கொடுக்க வேண்டிதானே? அவர்கள் பேசி இந்த பிரச்னையை முடிக்கலாமே? அப்படி இருந்தால் பிரச்னை வளர்ந்திருக்குமா? இன்றைக்கு கார்த்தி ஏதேனும் நிகழ்ச்சிக்கு போனா என்ன மாமா சௌக்கியமா என்று தான் பேசுகிறார். அது யார் கொடுத்தது? அமீர் தான். மேலும் மீதி படத்தை எடுக்க சசிகுமார் தான் பணம் கொடுத்தார்.

அதே சமயம் அமீர் எப்போதும் என்னை விட்டுக்கொடுக்க மாட்டார். நான் அவருக்கு கால் செருப்பாக தான் இன்றைக்கும் இருப்பேன். பருத்திவீரன் படத்தை பெரிய படமாக மாற்றினார். கார்த்தியை அந்த படம் மாதிரி ஒரு படம் பண்ண சொல்லுங்கள். நான் சினிமாவை விட்டே போகிறேன்” என அந்த நேர்காணலில் கஞ்சா கருப்பு பேசியுள்ளார். 

Tags :
Advertisement