ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று : இந்தியா பவுலிங் தேர்வு..!
பாகிஸ்தானுக்கு எதிரான் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
08:03 PM Sep 21, 2025 IST | Web Editor
Advertisement
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. குரூப் பிரிவு ஆட்டங்கள் முடிவுற்ற நிலையில் சூப்பா் 4 ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும். இன்றைய ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
Advertisement
ஏற்கெனவே குரூப் பிரிவு ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றிருந்தது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்கும் உள்ளது. இதனை தொடர்ந்து இரவு 7.30 மணியளவில் டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இதனை அடுத்து பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.