“அமலாக்கத்துறை கைது சட்ட விரோதமானது” - அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு!
08:10 PM Mar 23, 2024 IST | Web Editor
Advertisement
மேலும் அவரை மார்ச் 28-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அத்துடன் மார்ச் 28-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு அவரை ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. கெஜ்ரிவாலை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை கோரிய நிலையில் 6 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், அமலாக்கத்துறை தன்னை கைது செய்ததை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும் இந்த வழக்கை நாளை (மார்ச் 24) விசாரணைக்கு எடுக்க வேண்டுமென அவர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.