For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் ஜன. 24-ம் தேதி திறப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

05:49 PM Jan 17, 2024 IST | Web Editor
கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் ஜன  24 ம் தேதி திறப்பு   முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதிவு
Advertisement

ஜல்லிக்கட்டுக்கென மதுரையில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை" வரும் 24-ம் நாள் திறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை, அலங்காநல்லூர் - கீழக்கரைக்கு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"தமிழரின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் (ஜல்லிக்கட்டு) 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று, அதில் திமில் பெருத்த 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளையர்கள் களத்தில் சந்தித்துள்ளனர். புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வை, சுமார் 3 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். வெற்றி பெற்ற காளைகளும் - வீரர்களும் பரிசுகள் பெற்றார்கள்.

திராவிட மாடல் ஆட்சியில் பண்பாட்டின் அடையாளமாய் விளங்கும் ஏறுதழுவதலுக்கென மதுரையில் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை" வரும் 24-ம் நாள் திறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை, அலங்காநல்லூர் - கீழக்கரைக்கு வருகிறேன். தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம்! எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம்!" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement