For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Thanjavur-ல் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது - தப்பியோட முயன்றதில் பள்ளத்தில் தவறி விழுந்து எலும்பு முறிவு!

12:12 PM Sep 06, 2024 IST | Web Editor
 thanjavur ல் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது   தப்பியோட முயன்றதில் பள்ளத்தில் தவறி விழுந்து எலும்பு முறிவு
Advertisement

தஞ்சாவூரில் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இருவரை கைது செய்ய சென்ற போது தப்பியோட முயன்றதில் பள்ளத்தில் தவறி விழுந்து கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த திருமணமான 42 வயது பெண் கடந்த 3 ஆம் தேதி வேலைக்கு சென்றுவிட்டு இரவு தனது வீட்டிற்கு செல்வதற்காக பூதலூரில் பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் ராயந்தூரை சேர்ந்த பிரவீன் (32), ராஜ்கபூர் (25) இருவரும் வந்துள்ளனர். அப்போது அந்த பெண் தனியாக இருப்பதை அறிந்தவர்கள் லிப்ட் கொடுப்பதாக கூறியள்ளனர். இதனை நம்பி பிரவீனுடைய இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

ராஜ்கபூர் மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்துள்ளார். பூதலூரை தாண்டியதும் ஆள் இல்லாத பாலாயிகுளம் என்ற பகுதியில் சென்றபோது அந்த பெண்ணை பிரவீன், ராஜ்கபூர் இருவரும் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இந்நிலையில், வீட்டிற்கு வருவதாக கூறி, தனது அம்மா வெகுநேரமாகியும் வராத நிலையில், மகள் தனது தம்பியை விட்டு அம்மாவை தேடி வர சொல்லியுள்ளார்.

இதையும் படியுங்கள் :சிக்கிமில் ராணுவ வாகன விபத்தில் உயிரிழந்த கான்சாபுரம் #Soldier – உடலை விரைந்து கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை!

அப்போது வழியில் தாய் அழுது கொண்டு இருப்பதை பார்த்து மகன் நடந்த விவரங்களை கேட்டுள்ளார். பாதிக்கப்பட்ட தாய் நடந்த விவரங்களை கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த மகன், இது குறித்து பூதலுார் காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து காவல்துறையினர் பிரவீன், ராஜ்கபூர் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, இருவரையும் கைது செய்ய முயன்றபோது, காவல்துறையினரிடமிருந்து தப்பியோட இருவரும் முயன்றனர். அப்போது இருவரும் அருகில் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். இதில் ஒருவருக்கு கையிலும், மற்றொருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இருவரையும் தஞ்சாவூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக காவல்துறையினர் சேர்த்தனர். இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாட்டில் கடந்த 12 தேதி இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement