Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை அருகே மனைவியை கொலை செய்த கணவன் கைது!

07:06 AM May 30, 2024 IST | Web Editor
Advertisement

எண்ணூரில் கணவனே மனைவியை குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

சென்னை எண்ணூர் சத்தியவாணி மூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி ராஜி(25). இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. வாகன தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் பிரேம்குமாரும், அவரது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். ராஜி குழந்தைகளுடன் அவரது அம்மா வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில் தனது குழந்தைகளை காப்பாற்ற வேலைக்கு செல்லும் ராஜியிடம், அவரது கணவர் பிரேம்குமார் அடிக்கடி சென்று சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று ராஜி வேலை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது அம்மா வீட்டில் இருந்த பிரேம்குமார், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜியை முகம், வயிறு என பல இடங்களில் குத்தியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்த ராஜியை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜியை மீட்டு அரசு ஸ்டான்லி  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து மனைவியை கொலை செய்தற்காக பிரேம்குமாரை கைது செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இக்கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
CrimeEnnoreMurderPolice
Advertisement
Next Article