Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Armstrong கொலை வழக்கில் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

10:21 AM Oct 03, 2024 IST | Web Editor
Advertisement

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 30 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் A1 மற்றும் A2 குற்றவாளிகளாக ரவுடி நாகேந்திரன், ரவுடி சம்போ செந்தில் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

Advertisement

கடந்த ஜூலை மாதம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவரது வீட்டின் முன்பு ரவுடிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தற்போது வரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை எழும்பூர் நீதிமன்றத்தில் செம்பியம் போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டது. கொலைவழக்கில் தலைமறைவாக உள்ள சம்பவம் செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் உள்ளிட்ட 30 பேர்மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிக்கையில் A1 குற்றவாளியாக பிரபல ரவுடி நாகேந்திரன் மற்றும் A2 குற்றவாளியாக தலைமறைவாக இருக்கும் ரவுடி சம்போ செந்தில் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கொலைவழக்கில் 27 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளனர். வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில், அவர் வெளிநாடு தப்பி சென்று விட்டார் என கூறப்படுகிறது. சம்பவம் செந்திலுக்கு மிகவும் நெருக்கமானவர் என கூறப்படும் மொட்டை கிருஷ்ணனை பிடித்தால், ஆம்ஸ்ட்ராங் கொலை சதித்திட்டம், சம்பவம் செந்தில் இருப்பிடம் தொடர்பாக பல்வேறு பயனுள்ள தகவல்கள் கிடைக்கும் என போலீசார் கருதுகின்றனர்.

Tags :
ArmstrongBSPChargesheetsembiam police
Advertisement
Next Article