வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை என்ற பெயரில் வைரலாகும் படங்கள் உண்மைதானா? | #FactCheck
This news Fact Checked by PTI
வங்கதேசத்தில் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்துப் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலானது. இதுகுறித்து உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.
வங்கதேசத்தில் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்துப் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலானது. PTI Fact Check Desk இதுகுறித்து நடத்திய விசாரணையில் அந்த வீடியோ தவறான கூற்றுடன் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது என்றும், இந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் ஏற்பட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட உயிரிழந்த பெண்ணின் வீடியோ என்றும் கண்டறிந்துள்ளது.
ஜூலை 2 அன்று ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த மக்கள் மதப் பிரசங்கத்தைக் கேட்க ஹத்ராஸில் ஒன்றுகூடினர். அந்த பிரசங்கத்தை நிகழ்த்திய மதகுருவை பார்ப்பதற்காக ஓடிவந்தனர் மேலும் அவர் நடந்து சென்ற காலடி மண்ணை சேகரிக்க ஒன்று திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 121 பேர் உயிரிழந்தனர், அவர்களில் பெரும்பாலோர் பெண்கள். இந்த வீடியோதான் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த வீடியோவை ஃபேஸ்புக் பயனர் ஒருவர் டிசம்பர் 5 ஆம் தேதி அன்று பகிர்ந்து வங்கதேசத்தில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இந்துப் பெண்கள் கொலை செய்யப்பட்டதாக எழுதியிருந்தார். இந்த இடுகையின் இணைப்பு மற்றும் ஸ்கிரீன்ஷாட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
உண்மை சரிபார்ப்பு :
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவை கூகுள் லென்ஸ் மூலம் வீடியோவின் கீஃப்ரேமை பிரித்து தேடுதலுக்கு உட்படுத்தினோம். அதில் பெண்களின் உயிரிழந்த உடலைக் காட்டும் இதேபோன்ற வீடியோ 2024 ஜூலை 2 அன்று யூடியூப்பில் பதிவேற்றப்பட்டதைக் கண்டறிந்தது, இது வைரல் இருப்பதை வீடியோவைப் போலவே இருந்தது. வீடியோவிற்கான இணைப்பு மற்றும் அதன் ஸ்கிரீன்ஷாட் கீழே உள்ளது
கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ள ஹத்ராஸ் சம்பவம் என வீடியோவின் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து ஒரு குறிப்பை எடுத்துக்கொண்டு, கூகுள் லென்ஸில் தேடியபோது தம் வைரல் இடுகையின் அதே வீடியோவுடன் இன்ஸ்டாகிராம் இடுகையைக் கண்டறிந்தது. ஜூலை 5 அன்று இடுகையின் தலைப்பும் ஹத்ராஸிலிருந்து வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இடுகைக்கான இணைப்பு இங்கே உள்ளது மற்றும் அதன் ஸ்கிரீன் ஷாட் கீழே உள்ளது:
இதேபோல ஜூலை 10, 2024 அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தி அறிக்கையையும் பார்த்தோம். அந்தக் கட்டுரையின் Feature Image -ம் வைரலான வீடியோவில் காட்டப்பட்ட காட்சிகளும் அப்படியே இருந்தன. டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்திக் கட்டுரையின் இணைப்பு மற்றும் ஸ்கிரீன்ஷாட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை என்ற பெயரில் பழைய மற்றும் தொடர்பில்லாத வீடியோ தவறாகப் பகிரப்பட்டது என்று உறுதி செய்ய முடிகிறது.
முடிவுரை
வங்கதேச இந்துப் பெண்கள் முஸ்லிம்களால் படுகொலை செய்யப்பட்டதைக் காட்டுவதாகக் கூறி பல சமூக ஊடக பயனர்கள் வீடியோவைப் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ நடப்பு ஆண்டு ஜூலை மாதம் உ.பி.யின் ஹத்ராஸில் நடந்த கூட்ட நெரிசலில் பெண்கள் உயிரிழந்த வீடியோவில் காட்சிகள் என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. பழைய மற்றும் தொடர்பில்லாத வீடியோ சமூக ஊடகங்களில் தவறான கூற்றுடன் பகிரப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
Note : This story was originally published by ‘PTI’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.