For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய நிர்வாகிகள் - செல்வப்பெருந்தகை உத்தரவு!

04:50 PM Feb 26, 2024 IST | Web Editor
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய நிர்வாகிகள்   செல்வப்பெருந்தகை உத்தரவு
Advertisement

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்களை நியமித்து தலைவர் செல்வப்பெருந்தகை உத்தரவிட்டுள்ளார். 

Advertisement

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.  தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகையும் சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவராக எஸ்.ராஜேஷ் குமாரையும் கடந்த 17-ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் அறிவித்தது. இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து செல்வப்பெருந்தகை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அந்தவகையில், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர்களாக ஏ.கோபண்ணா, சொர்ணா சேதுராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுச்செயலாளர்களாக டி.செல்வம், கே.தணிகாசலம் மற்றும் என்.அருள் பெத்தையா ஆகியோரையும் நியமனம் செய்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை உத்தரவிட்டுள்ளார். 

Tags :
Advertisement