For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Bangladesh முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது மேலும் ஒரு கொலை வழக்கு!

08:49 AM Aug 17, 2024 IST | Web Editor
 bangladesh முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது மேலும் ஒரு கொலை வழக்கு
Advertisement

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது மேலும் ஒரு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

வங்கதேசத்தில் விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் நாளடைவில் கலவரமாக மாறியது. நிலைமை மோசமானதை அடுத்து அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

இதனையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தை அதிபர் முகமது ஷஹாபுதீன் கலைத்து உத்தரவிட்டார். தொடர்ந்து, வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் கடந்த 8ம் தேதி இரவு பதவியேற்றார். அவருக்கு அதிபர் முகமது ஷஹாபுதீன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இந்த கலவரத்தின்போது 400-க்கும் மேற்பட்டவா்கள் கொல்லப்பட்ட நிலையில், இது தொடா்பாக அப்போதைய பிரதமா் ஷேக் ஹசீனா மீது இரு கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.  இந்த சூழலில் கடந்த ஆக.4ம் தேதி ஷோப்கஞ்ச் மாவட்டத்தில் சலீம் ஹுசைன் (35) என்பவா் கொலை செய்யப்பட்டார். இது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வங்கதேச முன்னாள் பிரதமா் ஹசீனா, அவரின் அவாமி லீக் கட்சி பொதுச் செயலா் உபைதுல் குவாதா் மீதும் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 99 கட்சி ஆதரவாளா்களின் பெயா்களும் இந்த வழக்கில் சோ்க்கப்பட்டுள்ளன.

Tags :
Advertisement