Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முருக பக்தர்கள் மாநாட்டுக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வருகை!

மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வருகை தந்துள்ளார்.
05:36 PM Jun 22, 2025 IST | Web Editor
மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வருகை தந்துள்ளார்.
Advertisement

இந்து முன்னணி சார்பில் மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு அமைக்கப்பட்ட முருகனின் அறுபடை மாதிரி வீடுகளை பக்தர்கள் வழிபட்டு வந்த நிலையில், இன்று(ஜூன்.22) முருக பக்தர்கள் மாநாடு கலை நிகழ்ச்சியுடன் தொடங்கி உள்ளது.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் பாஜக தலைவர்கள் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உட்பட பல அரசியல் தலைவர்கள் பங்கேற்ற வண்ணம் உள்ளனர். அந்த வரிசையில் இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலமாக மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து திருப்பரங்குன்றம் கோயில் வழிபட்டு மாநாடு நடக்கவுள்ள அம்மா திடல் நோக்கி விரைந்தார்.

இந்த நிலையில் மாநாடு நடைற்று வரும் இடத்திற்கு பவன் கல்யாண் வருகை தந்துள்ளார். இதையடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர்  உற்சாக வரவேற்பளித்து வருகின்றனர்.

Tags :
DevotionMaanaaduMaduraiMuruga Bakthargal Manadumuruganpawan kalyan
Advertisement
Next Article