For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் திடீர் ராஜினாமா - ஒய்.எஸ்.ஷர்மிளா நியமிக்கப்பட வாய்ப்பு?

08:58 PM Jan 15, 2024 IST | Web Editor
ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் திடீர் ராஜினாமா   ஒய் எஸ் ஷர்மிளா நியமிக்கப்பட வாய்ப்பு
Advertisement

ஆந்திராவின் காங்கிரஸ் தலைவராக இருந்த, கிடுகு ருத்ர ராஜு தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அந்த பதவியில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஒய்.எஸ்.ஷர்மிளா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா கடந்த ஜன.4-ம் தேதி தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துக் கொண்டார். மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அவரது இந்த செயல்பாடு ஆந்திர அரசியலில் கவனம் பெற்றது. 

இதனிடையே, ஆந்திராவின் காங்கிரஸ் தலைவராக இருந்த, கிடுகு ருத்ர ராஜு தனது பதவியை இன்று (ஜன.15) ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை கடந்த வாரம் அவர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் ராஜினாமாவுக்கான காரணம் எதையும் அவர் குறிப்பிடவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு ஷர்மிளா காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டால், இது ஒரு திருப்பமாக பார்க்கப்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

Tags :
Advertisement