“சுதந்திரமாக செயல்பட அன்புமணிக்கு உரிமை உண்டு” - ராமதாஸ் பேட்டி!
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று(ஜுன்.01) விழுப்புரம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “ பூம்புகாரில் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி மகளிர் மாநாடு நடைபெறும். முழுக்க முழுக்க பெண்கள் கலந்துக்கொள்ளும் மாநாடு. லட்சக்கணக்கான பெண்கள் கலந்துக்கொள்வார்கள். சட்டதிவிகளை நான் பார்க்கவில்லை. நாளை சொல்கிறேன்.
மகளிர் மாநாட்டிற்கு எல்லோருக்கும் அழைப்பு உண்டு. யாரையும் கலந்துக்கொள்ள வேண்டாம் என சொல்லப்போவதில்லை. எந்த முரண்பாடும் இல்லை. என்னை யாராலும் இயக்க முடியாது. 95 ஆயிரம் கிராமங்களுக்கு சென்றுள்ளேன். 46 ஆண்டுகளாக பயணிக்கிறேன். இன்னும் எத்தனை ஆண்டுகள் பயனிப்பேன் என எனக்கே தெரியாது. உங்களின் ஒத்துழைப்போடு பயணிப்பேன்.
திலகபாமாவை நீக்கிவிட்டு சிறுபான்மையினரை நியமித்துள்ளேன். கடந்த காலங்களில் அப்படித்தான் இருந்தது. இடையில் இருவரை நியமித்திருத்தோம் தற்போது மீண்டும் ஒரு சிறுபான்மையினருக்கு கொடுத்துள்ளோம். சுந்ததிரமாக செயல்படுவது மனிதர்களின் கடமை. அது அவர்(அன்புமணி ராமதாஸ்) உரிமை. நிர்வாகிகள் போவார்கள், வருவார்கள். ஒருவர் போனோல், இன்னொருவர் வருவார். ஒருவரின் செயல்பாட்டை பார்த்து கட்சி நிர்வாகிகள் மாற்றம் இருக்கும். கட்சியில் எந்த குழப்பமும் இல்லை. எல்லாவற்றிர்கும் தீர்வு உண்டு. தீர்வுகான யோசனை குறித்து, யோசிக்கவில்லை. பெண்கள் மாநாட்டுக்கு மாநாட்டு குழு தலைவராக புத.அருள்மொழி தலைவராக இருப்பார்”
இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.