For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தாயகம் திரும்பிய மனு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு!

12:01 PM Aug 07, 2024 IST | Web Editor
தாயகம் திரும்பிய மனு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு
Advertisement

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி மகளிர் துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கல பதக்கங்களை வென்ற இந்தியாவின் இளம் வீராங்கனை மானு பாக்கர் டெல்லி வந்தடைந்தார்.

Advertisement

பாரிஸ் ஒலிம்பிக் தூப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவு மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய இளம் வீராங்கனை மனு பாக்கர் இன்று இந்தியா திரும்பினார்.

அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திறந்தவெளி காரில் நின்றபடி ரசிகர்கள் மத்தியில் பதக்கங்களை காண்பித்த மானு பாக்கர், ரசிகர்களின் அளவுகடந்த வரவேற்பையும் அன்பையும் பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்தார்.

மேலும் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் உடன் வெண்கல பதக்கம் வென்ற சரோப்ஜித் சிங்கும் தாயகம் திரும்பினார். இதனால் நிறைவு விழாவின் போது இந்திய கொடியை ஏந்தி செல்ல மாற்று வீரர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

துப்பாக்கி சுடுதலில் மானு பாக்கர் தனிநபர் 10 மீ. ஏர் பிஸ்டல், கலப்பு அணிகள் பிரிவில் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து 2 வெண்கலப் பதக்கங்களை வென்றார். இதன் மூலம் ஒரே ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார். மகளிர் 25 மீ. ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை மானு பாக்கர் தவறவிட்டார்.

Tags :
Advertisement