For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வெள்ளியங்கிரி மலை ஏறிய 18 வயது இளைஞர் தவறி விழுந்து உயிரிழப்பு!

கோவை பூண்டி, வெள்ளியங்கிரி மலை ஏறிய தூத்துக்குடியை சேர்ந்த நபர் ஏழாவது மலையில் இறங்கும் போது கால் தவறி கீழே விழுந்து உயிரிழப்பு. 
12:24 PM Apr 19, 2025 IST | Web Editor
வெள்ளியங்கிரி மலை ஏறிய 18 வயது இளைஞர் தவறி விழுந்து உயிரிழப்பு
Advertisement

தென் கைலாயம் என போற்றப்படும் கோவை வெள்ளியங்கிரி சிவன் கோயிலுக்கு ஏழு மலைகளை கடந்து சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்து உள்ளனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Advertisement

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மூன்று பேர் உடல்நிலை சரி இல்லாமல் மலையேற்றத்தின் போது உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் புவனேஷ்வரன் (18) தனது பள்ளி நண்பர்களான முத்துக்குமார் மற்றும் ஹரிஹரசுதன் உடன் கடந்த 17.04.2024 அன்று தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு நேற்று 18.04.2025 காலை வெள்ளியங்கிரிக்கு வந்தடைந்து உள்ளார்.

சாமி தரிசனம் முடித்து விட்டு நேற்று இரவு மலையில் இருந்து இறங்கும் போது, ஏழாவது மலையில் இருந்து புவனேஷ்வரன் கால் தவறி சுமார் 10 மீட்டர் ஆழத்தில் உருண்டு விழுந்து உள்ளார். இந்த விபத்தில் புவனேஷ்வரனின் இடது காதின் அடியிலும், தலையின் பின் பக்கத்திலும் பலத்த ரத்தக் காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த டோலி பாரம் தூக்கும் பணியாளர்கள், கடும் சிரமத்திற்கு இடையே புவனேஷ்வரனை அடிவாரத்திற்குக் கொண்டு வந்தனர்.

பின்னர் அவர் உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி புவனேஷ்வரன் உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து புவனேஷ்வரனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயர சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
Advertisement