"ஏற்றத் தாழ்வுகள் மத்தியில், ஒன்று மட்டும் மாறாமல் இருந்தது" - சென்னை வீரர் பத்திரானா உருக்கம்!
10 அணிகள் இடையிலான 18-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் இந்த தொடரில், லீக் சுற்றுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவடந்தன. இதில், பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை ஆகிய 4 அணிகள் எலிமினேட்டர் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. 5 முறை சாம்பியனான சென்னை அணி இந்த சீசனில் சிறப்பாக செயல்பட தவறியது.
இதையும் படியுங்கள் : வெப் சீரிஸாக உருவாகும் ஹாரி பாட்டர்… நடிக்கவுள்ள 3 சிறுவர்கள் அறிமுகம்!
இதனால், இந்த சீசனில் கடைசி இடத்தை பிடித்து எலிமினேட்டர் சுற்றுக்கு தகுதிபெற தவறியது. முன்னதாக நடப்பு சீசனின் தொடக்கத்தில் சில போட்டிகளில் ஆடிய சென்னை அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டார். பின்னர் அவர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார். இதனால் சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் மகேந்திரசிங் தோனி நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், இந்த சீசன் குறித்து சென்னை அணி வீரர் மதீஷா பத்திரானா இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
"நாங்கள் எதிர்பார்த்த சீசனாக இது அமையவில்லை. ஆனால், இந்த ஏற்றத் தாழ்வுகள் மத்தியில், ஒன்று மட்டும் மாறாமல் இருந்தது. அது சென்னை ரசிகர்களின் அன்பும், ஆதரவும். என் மீது நம்பிக்கை வைத்த அணிக்கும், நிர்வாகத்திற்கும், ஒவ்வொரு ஆதரவாளருக்கும் நன்றி. தொடர்ந்து கடினமாக உழைப்பேன். இந்த குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நன்றியுள்ளவனாக உணர்கிறேன்"
இவ்வாறு சென்னை அணி வீரர் மதீஷா பத்திரானா தெரிவித்துள்ளார்.