நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு!
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி கடந்த 2016-ல் மெழுகுவர்த்தி சின்னத்திலும், 2019 முதல் 2021 வரை கரும்பு விவசாயி சின்னத்திலும் தேர்தலை சந்தித்தது. தொடர்ந்து 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது தேர்தல் ஆணையத்திடம் தாமதமாக விண்ணப்பித்ததால் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படவில்லை.
இதையடுத்து, தேர்தல் ஆணையம் வைத்திருந்த சின்னங்கள் பட்டியலில் இருந்து மைக் சின்னத்தை தேர்ந்தெடுத்து நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி, மாநில கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெற்றது. இந்த நிலையில் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.
மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட
நாம் தமிழர் கட்சிக்கு #விவசாயி சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து 10-05-2025 அன்று அறிவித்துள்ளது. pic.twitter.com/RcXENokAz5— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) May 10, 2025
அந்த வகையில், கலப்பையுடன் விவசாயி இருப்பது போன்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. சின்னத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள சீமான், "மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து 10-05-2025 அன்று அறிவித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.