Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மக்கள் வாக்கு அதிமுகவிற்கு திரும்பும் - வைகை செல்வன் பேட்டி!

09:03 AM Feb 21, 2024 IST | Web Editor
Advertisement

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்கு எந்த பணிகளும் செய்யாத காரணத்தினால் மக்கள் எதிர்ப்பு நிலையில் உள்ளனர். அவர்கள் வாக்கு அனைத்தும் அதிமுகவிற்கு திரும்பும் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் தெரிவித்துள்ளார்.

Advertisement

காஞ்சிபுரத்தில் உள்ள முருகன் கோயில்களில் ஒன்றான சுப்பிரமணியர் (குமரகோட்டம்) கோயிலில் மாசி மாத செவ்வாய் கிழமையை ஒட்டி கந்தக்கோட்ட முருகன், வள்ளி - தெய்வானை சமேத குமரகோட்ட முருகன் வெள்ளி தேரில் தரிசனம் அளித்தனர்.  இந்த தேரினை அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், அதிமுக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சோமசுந்தரம்,  அதிமுக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன், உள்ளிட்ட அதிமுக தொண்டர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகை செல்வன் கூறியதாவது:

“கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து திமுகவைச் சேர்ந்த 39 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். அவர்கள் தங்களது தொகுதிகளில் சிறு துரும்பை கூட மக்களுக்காக கிள்ளி போடவில்லை. எனவே மக்கள் அவர்களுக்கு எதிரான நிலையில் உள்ளனர். அந்த வாக்குகள் மொத்தமும் அதிமுகவுக்கு தான் வரும்.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். அதிமுகவுடன் கூட்டணி கட்சிகள் இணைவது குறித்து விரைவில் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி உறுப்பினருமான எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார்” என தெரிவித்தார்.

Tags :
AIADMKDMKElection2024kancheepurammp'sNews7Tamilnews7TamilUpdatesVaigai Selvan
Advertisement
Next Article