Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அஜித்குமாரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி!

சிவகங்கை காவலாளி அஜித் குமாரில் சகோதரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
03:52 PM Jul 06, 2025 IST | Web Editor
சிவகங்கை காவலாளி அஜித் குமாரில் சகோதரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
Advertisement

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தற்காலிகமாக அஜித்குமார் (29) என்பவர் பணிபுரிந்து வந்தார்.  இந்த கோயிலுக்கு வந்த பெண்ணின் காரில் இருந்த நகை மாயமான சம்பவம் தொடர்பாக அஜித்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை என்ற பெயரில் தனிப்படை காவலர்கள் 6 பேர் கோயிலுக்கு பின்புறம் வைத்து அஜித்குமாரை சரமாரியாக நடத்தினர். மேலும், அஜித்குமாரின் தம்பி நவீன்குமாரையும் போலீசார் தாக்கினர். போலீசார் தாக்கியதில் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

Advertisement

இதற்கிடையே, காவல்துறையினர் அஜித்குமாரை தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. அஜித்குமாரின் உடலில் 50 க்கும் அதிகமாக இடங்களில் காயம் இருந்ததாக உடற்கூராய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அவரின் உடம்பில் சிகரெட்டால் சுட்டும்,  மிளகாய் பொடி கலந்த நீரை ஊற்றியும் சித்ரவதை செய்ததும் தெரியவந்தது.

இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் நவீன் குமார் போலீசார் தாக்கியதில் கால் ஊன்ற சிரமமாக இருப்பதாக கூறி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags :
AjithkumarAjithkumar CaseBrotherCBIhospitalPolicesivaganga
Advertisement
Next Article