For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை நிராகரித்த அதானி குழுமம்!

01:44 PM Aug 11, 2024 IST | Web Editor
ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை நிராகரித்த அதானி குழுமம்
Advertisement

அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனங்களில் செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் பங்குகளை வைத்துள்ளதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டுகளை மறுப்பதாக அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Advertisement

அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஹிண்டன்பர்க். இந்த நிறுவனம், உலகில் நடைபெறும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது. இதன் அறிக்கைகள் மோசடிகளை அம்பலப்படுத்துவதிலும், முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிப்பதாக நம்பப்படுகிறது.

கடந்த ஆண்டு தொடக்கத்தில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக போலி நிறுவனம் மூலம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக ஹிண்டன்பர்க் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதன் விளைவாக, அதானி குழும நிறுவனங்களின் பங்குகளில் விலை மாபெரும் இழப்பைச் சந்தித்தன.

இந்த நிலையில் இந்தியாவில் மிகப்பெரிய விஷயம் வரப்போவதாக, ஹிண்டன்பர்க் நிறுவனம் நேற்று எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த பதிவு இணையத்தில் பெரும் புயலை கிளப்பிய நிலையில், அதானி குழும ஊழல் குறித்து மேலும் ஓர் அதிர்ச்சிக்குரிய தகவலை ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டது. அதில், ஊழல் புகாரில் தொடர்புடைய அதானி குழுமத்தின் வெளிநாட்டு நிறுவனத்தில் செபியின் தலைவர் மாதவியும், அவரது கணவர் தவால் புச்சும் பங்குகள் வைத்திருந்ததாக தெரிவித்தது. இந்த அறிக்கை தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது.  இதுகுறித்து “ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் தவறானவை. உள்நோக்கம் கொண்டவை. அடிப்படை ஆதாரமற்றவை. அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறோம். எங்களுடைய வெளிநாட்டு முதலீடுகள் வெளிப்படை தன்மை கொண்டவை” என அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement