#ActressRekhaNairக்கு சொந்தமான கார் மோதி விபத்து - முதியவர் உயிரிழப்பு!
நடிகை ரேகா நயருக்கு சொந்தமான வாகனம் மோதி விபத்து 55 வயது மதிக்கத்தக்க மஞ்சன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தமிழ்சினிமாவில் நடிகையாக இருப்பவர் ரேகா நாயர். இவர் இரவின் நிழல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் தமிழில் நிறைய சீரியல்களில் இவர் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சென்னை மேற்கு ஜாபர்கான் பேட்டை பகுதியில் நேற்று இரவு 8 மணி அளவில் ரேகா நாயரின் கார் ஓட்டுநர் பாண்டி (வயது 25) காரை ஓட்டிச் சென்றுள்ளார். இவர் எம்ஜிஆர் நகர் பகுதியை சார்ந்தவர். நேற்று நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான நான்கு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்ற பொழுது வி எம் பாலகிருஷ்ணா தெருவில் மதுபோதையில் கீழே படுத்து இருந்த நபர் மீது தவறுதாக ஏற்றியுள்ளாஅர்.
இதனைத் தொடர்ந்து அவர் சம்பவ இடத்திலேயே கூலி தொழிலாளி உயிரிழந்துள்ளார். விசாரணையில் அவர் அப்பகுதியைச் சார்ந்த 55வயது மதிக்கத்தக்க மஞ்சன் என்பது தெரியவந்தது. தொடர்பாக கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் .
இதனைத் தொடர்ந்து நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான வாகனத்தை பறிமுதல் செய்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். உயிரிழந்த மஞ்சன் உடல் ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில்பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.