For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விவசாயியாக களமிறங்கிய நடிகர் சசிகுமார்!

02:14 PM Aug 09, 2024 IST | Web Editor
விவசாயியாக களமிறங்கிய நடிகர் சசிகுமார்
Advertisement

இயக்குநரும், நடிகருமான சசிகுமார் தனது வயலில் நடவு நடும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.  

Advertisement

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சசிகுமார்.  இவர் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் தீவிர கவனம் செலுத்திவருகிறார்.  இவர் சுந்தர பாண்டியன், குட்டிப்புலி, பிரம்மன், தாரை தப்பட்டை, அயோத்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் சூரி மற்றும் சசிகுமார் நடிப்பில் வெளியான கருடன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  மேலும், இத்திரைப்படம் ரூ. 50 கோடி வரை வசூலித்தது.  இவர் நடித்துள்ள ’ஃபீரீடம் ஆகஸ்ட் 14’ திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், சசிக்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வயலில் நடவு நடும் படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில், தனது வயலில் நடவு நடும் பெண்களுடன் நின்று கொண்டிருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து ‘எங்க வயலில் நடவு’ என பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement