For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'குண்டூர் காரம்' திரைப்படத்தில் பீடி புகைத்த நடிகர் மகேஷ் பாபு | சர்ச்சைக்கு கொடுத்த விளக்கம் என்ன தெரியுமா...?

07:32 AM Jan 17, 2024 IST | Web Editor
 குண்டூர் காரம்  திரைப்படத்தில் பீடி புகைத்த நடிகர் மகேஷ் பாபு   சர்ச்சைக்கு கொடுத்த விளக்கம் என்ன தெரியுமா
Advertisement

'குண்டூர் காரம்' திரைப்படத்தில் நடிகர் மகேஷ் பாபு பீடி குடித்தது சர்ச்சையான நிலையில், இதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் மகேஷ் பாபு. தொடர்ந்து சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து அவர், அடுத்து த்ரி விக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடித்துள்ளார் ‘ஆலா வைகுந்தபுரமுலோ’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய அவர், மூன்றாவது முறையாக மகேஷ் பாபுவை இயக்கி யுள்ளார்.

இப்படத்தில் மகேஷ்பாபுவுடன் இணைந்து, பிரகாஷ் ராஜ், மீனாட்சி சௌத்ரி, சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் கடந்த 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வசூலை குவித்துவருகிறது.

இந்நிலையில், குண்டூர் காரம் படத்தில் நான் பிடித்தது வழக்கமான பீடி இல்லை என்றும், அது லவங்க இலைகளால் ஆன ஆயுர்வேத பீடி. முதல்முறை ஒரிஜினல் பீடி பயன்படுத்திய சில நேரத்திலேயே தலைவலி வந்துவிட்டது என தெரிவித்தார்.

Advertisement