Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"தரமற்ற கட்டிடம் கட்டிய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" - அண்ணாமலை வலியுறுத்தல்!

சூரியனார் கோவில் ஊராட்சியில் தரமற்ற முறையில் கட்டிடம் கட்டிய ஒப்பந்ததாரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
10:33 AM Jun 20, 2025 IST | Web Editor
சூரியனார் கோவில் ஊராட்சியில் தரமற்ற முறையில் கட்டிடம் கட்டிய ஒப்பந்ததாரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
Advertisement

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

Advertisement

"தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சூரியனார் கோவில் ஊராட்சியில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை, நான்கு நாட்களுக்கு முன்பாக, கடந்த 16ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஆனால் கட்டிடம் திறக்கப்படுவதற்கு முதல் நாளே, இரண்டு அறைகளின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்து, அவசர அவசரமாக பேட்ச் வொர்க் செய்திருக்கிறார்கள். முதலமைச்சர் திறப்பு விழாவிற்கு பிறகு, தற்போது, மீண்டும் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. ஒட்டு மொத்தமாக பேட்ச் வொர்க்கில் கட்டப்பட்ட தரமற்ற கட்டிடத்தைத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்திருக்கிறார்.

அதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் ஊராட்சி மன்ற ஊழியர்கள் யாரும் அந்த அறையில் இல்லாததால், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. ஆனால் எப்போது கட்டிடம் இடிந்து விழுமோ என்ற பயத்தில், இனி எப்படி ஊழியர்கள் அங்கிருந்து பணியாற்ற முடியும்?

உடனடியாக, தரமற்ற முறையில் கட்டிடம் கட்டிய ஒப்பந்ததாரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு சார்பில் இந்தக் கட்டிடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்த பிறகே, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
AnnamalaiBJPcontractorinsistsMKStalinsubstandard building
Advertisement
Next Article