For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன்” - #Iltija Mufti-யின் எக்ஸ் தளப்பதிவு!

01:15 PM Oct 08, 2024 IST | Web Editor
“மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன்”    iltija mufti யின் எக்ஸ் தளப்பதிவு
Advertisement

மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக மெஹபூபா முஃப்தியின் மகள் இல்திஜா முஃப்தி தெரிவித்துள்ளார்.

Advertisement

ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு செப்.18, 25 மற்றும் அக்டோபர் 1 என மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைப்பெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.

ஜம்மு- காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும், பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) ஆகியவை தனித்தும் போட்டியிட்டன. தற்போதைய நிலவரப்படி, ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி(இந்தியா கூட்டணி) முன்னிலை பெற்றுள்ளது. இந்த தேர்தலில் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரான மெஹபூபா முப்தா போட்டியிடாத நிலையில், ரீகுஃப்வாரா-பிஜ்பெஹாரா தொகுதியில் அவரது மகள் இல்திஜா முஃப்தி முதல்முறையாக போட்டியிட்டார்.

வாக்கு எண்ணிக்கையில் தற்போது அவர் பின்னடைவில் இருந்து வருகிறார். இதையடுத்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;

“மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன். பிஜ்பெஹாராவில் உள்ள அனைவரிடமிருந்தும் நான் பெற்ற அன்பும், பாசமும் எப்போதும் என்னுடன் இருக்கும். இந்த தேர்தலுக்காக கடுமையாக உழைத்த எனது கட்சியினருக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement