For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

3-வது கட்டமாக வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி! புதுடெல்லி தொகுதியில் களமிறங்குகிறார் சோம்நாத் பார்தி!

05:07 PM Feb 27, 2024 IST | Web Editor
3 வது கட்டமாக வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி  புதுடெல்லி தொகுதியில் களமிறங்குகிறார் சோம்நாத் பார்தி
Advertisement

டெல்லி மற்றும் ஹரியானா மாநிலங்களில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. புதுடெல்லி தொகுதியில் மாளவியா நகர் சட்டமன்ற உறுப்பினர் சோம்நாத் பார்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

Advertisement

ஆம் ஆத்மி கட்சி செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 27) டெல்லி மற்றும் ஹரியானாவில் உள்ள முக்கிய தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களை அறிவித்தது. கிழக்கு டெல்லிக்கு சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் குமார் மற்றும் புதுடெல்லிக்கு மாளவியா நகர் சட்டமன்ற உறுப்பினர் சோம்நாத் பார்தி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

மேற்கு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் காங்கிரஸ் எம்பி மகாபல் மிஸ்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் தெற்கு டெல்லிக்கு துக்ளகாபாத் சட்டமன்ற உறுப்பினர் சாஹி ராம் பஹல்வான் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், ஹரியானாவில், குருக்ஷேத்ரா தொகுதி வேட்பாளராக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சுஷில் குப்தாவை களமிறக்குகிறது. ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே அசாமில் 3 வேட்பாளர்களையும், குஜராத்தில் இரண்டு வேட்பாளர்களையும் அறிவித்திருந்தது. டெல்லி, ஹரியானா, கோவா மற்றும் குஜராத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்தான சில நாட்களுக்குப் பிறகு ஆம் ஆத்மியின் அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement