For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருமணமான 4 நாட்களில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு... நடந்தது என்ன?

கோவையில் திருமணமான 4 நாளில் இளம்பெண் விபரீத முடிவெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
06:29 AM Jun 12, 2025 IST | Web Editor
கோவையில் திருமணமான 4 நாளில் இளம்பெண் விபரீத முடிவெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
திருமணமான 4 நாட்களில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு    நடந்தது என்ன
Advertisement

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரவணன் (27). இவர் கோவையில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், திண்டுக்கல்லை சேர்ந்த தீபிகா (21) என்பவருக்கும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு கோவை
வந்த இருவரும் கோவில்பாளையத்தில் வாடகை வீடு எடுத்து தங்கினர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (ஜுன் 11) சரவணன் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினர்.

Advertisement

பின்னர், சில காரணங்களுக்காக வெளியே சென்று விட்டு சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது. அப்போது, மனைவி தீபிகா தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டதைக் கண்டு சரவணன் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தார். இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பாளையம் போலீசார் அவரின் உடலை
கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவத்திற்கு கணவன், மனைவி சண்டை காரணமா? அல்லது வேறு காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. திருமணமாகி 4 நாட்களே ஆனதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement