Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பட்டுக்கோட்டை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் ஆணவக்கொலை? - தலைமறைவாக இருந்த பெற்றோரிடம் விசாரணை!

12:31 PM Jan 09, 2024 IST | Web Editor
Advertisement

பட்டுக்கோட்டை அருகே காதல் திருமணம் செய்த பெண் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில்,  தலைமறைவாக இருந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement

பட்டுக்கோட்டை அருகே வாட்டாத்திக்கோட்டை, நெய்வவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரின் மகள் ஐஸ்வர்யா (19).  பக்கத்து கிராமமான பூவாளூரைச் சேர்ந்தவர் பாஸ்கர்.  இவரின் மகன் நவீன் (19).  மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவும், பட்டியலினத்தைச் சேர்ந்த நவீனும் பள்ளி காலத்திலிருந்தே காதலித்து வந்துள்ளனர். இது தொடர்பாக,  ஐஸ்வர்யா பெற்றோர் மற்றும் உறவினர்கள், நவீன் பெற்றோரிடம் `உன் மகன் என் மகளுடன் பழகக் கூடாது.  மீறினால் என்ன நடக்கும் என்றே தெரியாது’ எனப் பிரச்னை  செய்துள்ளனர்.  அதன் பிறகும்,  யாருக்கும் தெரியாமல் இருவரின் காதலும் தொடர்ந்துள்ளது.  இந்த நிலையில் படிப்பை முடித்த இருவரும் திருப்பூரில் வெவ்வேறு கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில்,  இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் நண்பர்கள் முன்னிலையில், திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. திருமணம் குறித்த தகவலறிந்த ஜஸ்வர்யாவின் உறவினர்கள்,  நவீன் அப்பாவிடம் சென்று உன் பிள்ளையை நீ அழைத்துக் கொள், எங்கள் மகளை நாங்கள் அழைத்து செல்கிறோம் என கூறியுள்ளனர்.  மேலும், இதனை யாருக்கும் தெரியாமல் பார்த்து கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளனர். பின்னர், இவர்கள் இருக்குமிடத்தை அறிந்த பல்லடம் காவல் நிலைய போலீஸார் இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பேச்சுவார்த்தையின் போதே ஜஸ்வர்யாவின் உறவினர்கள் ஐஸ்வர்யாவை அழைத்து சென்றுள்ளனர்.

பின் நவீன் தனது சொந்த ஊருக்கு சென்றார். மறுநாள் ஐஸ்வர்யா மர்மான முறையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த ஜஸ்வர்யாவின் உடலை யாருக்கும் தெரியாமல் ஜஸ்வர்யாவின் உறவினர்கள் எரித்துள்ளனர். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில்,  தலைமறைவாக இருந்த ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள்,  தாய் ரோஜா,  16 வயது சிறுமி உட்பட 6 பேரையும் கண்டுபிடித்து,  ரகசிய இடத்தில் வைத்து  காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
CasteviolenceCrimemanslaughterNeivaviduthiNews7Tamilnews7TamilUpdatesPolicePuvalurYoungGirl
Advertisement
Next Article