ராஜஸ்தானில் பர்தா அணிந்த பெண்ணை இளைஞர்கள் தூக்கிச் செல்வதாக வைரலாகும் காணொலி - உண்மை என்ன?
This News Fact Checked by ‘The Quint’
சமூக ஊடகங்களில் ஒரு காணொலி வைரலாகி வருகிறது, அதில் ஒரு ஆட்கள் யாருமற்ற தெருவில் இளைஞர்கள் சிலர் பர்தா அணிந்த ஒரு பெண்ணை கிண்டல் செய்து பின்னர் அடித்து, வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்வதைக் காணலாம்.
வைரலாகும் கூற்று:
சில பயனர்கள் இந்த காணொலியைப் பகிர்ந்து இந்த சம்பவம் இந்தியாவில் நடந்தது என்று பரப்பி வருகிறார்கள். முஸ்லிம் பெண்ணைக் கடத்திய இளைஞர்கள் இந்துக்கள் என்றும் பயனர்கள் எழுதியுள்ளனர்.
வைரலாகும் கூற்று உண்மையா? :
சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்தக் காணொலி இந்தியாவைச் சார்ந்தது அல்ல மாறாக வங்கதேசத்தை சார்ந்தது. அதேபோல இந்தக் காணொலி உண்மையானது அல்ல, ஆனால் ஸ்கிரிப் செய்யப்பட்டு படமாக்கப்பட்டது.
உண்மையை எப்படிக் கண்டுபிடித்தோம்?:
வைரலான காணொலியை கூகுள் லென்ஸின் உதவியுடன் ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தினோம். எங்கள் தேடலில், ஹசிரா அட்டா 2 என்ற பேஸ்புக் பக்கத்தில் அதே காணொலியைக் கண்டோம். இந்தப் பக்கத்தில் காணப்படும் தகவலின்படி, இது வங்கதேசத்தின் காசிபூரிலிருந்து இயக்கப்படுகிறது.
இந்த ஃபேஸ்புக் பக்கத்தின் விளக்கத்தில், "எங்கள் வீடியோக்களை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது, இது பொழுதுபோக்குக்காக மட்டுமே, பக்கத்தைப் பின்தொடர்ந்ததற்கு நன்றி. உங்களை மகிழ்விக்க நாங்கள் கடுமையாக உழைக்கிறோம்." என எழுதப்பட்டிருந்தது. (வங்காள மொழியிலிருந்து இந்திக்கு மொழிபெயர்க்கப்பட்டது)
இந்தப் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட இதுபோன்ற பல ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட வீடியோக்கள் உள்ளன. இந்தப் பக்கத்தில் அதே இடத்தில் படமாக்கப்பட்ட பிற ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட வீடியோக்களையும் நாங்கள் கண்டோம்.
செய்தி அறிக்கைகள்:
இந்த சம்பவம் தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைத் தேடியபோது ராஜஸ்தானில் இதுபோன்ற எந்தவொரு சம்பவத்தையும் குறிப்பிடும் செய்தி அறிக்கையையும் நாங்கள் காணவில்லை.
முடிவு:
வங்காளதேசத்திலிருந்து ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட வீடியோ ஒன்று ராஜஸ்தானின் வீடியோவாக வகுப்புவாத நோக்கங்களுடன் பகிரப்படுகிறது. வைரல் கூற்று மற்றும் வீடியோ இரண்டும் உண்மையானவை அல்ல.
Note : This story was originally published by ‘The Quint’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.