For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னையில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திடீர் திருப்பம்!

10:08 PM Jun 12, 2024 IST | Web Editor
சென்னையில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திடீர் திருப்பம்
Advertisement

சென்னையில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் புதிய திருப்பமாக, அச்சிறுமிக்கு இனிப்பில் போதைப்பொருளை கலந்துகொடுத்து இந்த அத்துமீறலில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 

Advertisement

சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி சேத்துப்பட்டில் உள்ள
தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமி தனது நண்பர்களுடன்
அண்ணா நகரில் உள்ள ஒரு கஃபேவிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கஃபேவில் ஒரு இளம்பெண்ணுடன் சிறுமிக்கு பழக்கம்
ஏற்பட்டுள்ளது.

இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், கடந்த மே மாதம் 13 ஆம் தேதி தனது பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சிறுமியை அழைத்துள்ளார். அழைப்பையடுத்து சாலிகிராமத்தில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக சிறுமி சென்றதாகவும், அங்கு இளம்பெண் இரண்டு ஆண் நண்பருடன் இருந்ததாகவும் தெரிகிறது.

பின்னர் இளம்பெண் சிறுமியை வற்புறுத்தி இனிப்பு ஒன்றை கொடுத்ததாகவும், அந்த
இனிப்பை சாப்பிட்டவுடன் சிறுமிக்கு மயக்கம் ஏற்பட்டதால் தண்ணீர் கேட்டதாக
கூறப்படுகிறது. தண்ணீர் கொடுப்பதாக கூறி ஒரு அறைக்குள் சிறுமியை பூட்டிவிட்டு
அந்த இளம்பெண் தப்பி சென்றிருக்கிறார். பின்னர் இளம்பெண்ணுடன் வந்த இரண்டு ஆண் நண்பர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனையடுத்து  சிறுமி காலையில் எழுந்து இது குறித்து இளம்பெண்ணிடம் கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு மாதம் கழித்து அதிகப்படியான வயிற்று வலி ஏற்பட்டதால் நடந்த சம்பவம் தொடர்பாக தனது சகோதரியிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்த போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

உடனடியாக சிறுமியின் பெற்றோர் இது குறித்து விருகம்பாக்கம் அனைத்து மகளிர்
காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சிறுமியை பிறந்தநாள் நிகழ்ச்சி என ஆசை வார்த்தை கூறி அழைத்துச்
சென்றது பெருங்களத்தூரை சேர்ந்த பிரதிக்சா அகிரா என்பதும், இவர் சினிமாத்துறையில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. பிறந்தநாளின் போது அகிராவின் காதலன் சோமேஷிற்கு விருந்தளிக்க சிறுமியை அகிரா அழைத்து சென்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

அப்போது சிறுமிக்கு இனிப்பில் போதை மருந்து கொடுத்து மயக்கமடைய செய்து வில்லியம்ஸ் மற்றும் காதலன் சோமேஷ் ஆகியோர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து செல்போன் எண்ணை வைத்து இளம்பெண் பிரதிக்சா அகிரா மற்றும் வடபழனியை சேர்ந்த கல்லூரி மாணவரான சோமேஷ் என்ற சோமசுந்தரம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான கோடம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற வில்லியம்ஸை போலீசார் கைது செய்துள்ளனர். அவரோடு
விழுப்புரத்தைச் சேர்ந்த சூர்ய பிரகாஷ், கல்லூரி மாணவரான சைதாப்பேட்டையைச்
சேர்ந்த அஜய் ஆகியோரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இந்த மூவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, வழக்கின் திடீர் திருப்பமாக சிறுமிக்கு மெத்தபெடைமைன் எனும் போதைப்பொருள் கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் தெரியவந்துள்ளது.

போதைப் பொருள் விற்பனை செய்தது தொடர்பாகவும் வில்லியம்ஸ், சூர்ய பிரகாஷ், அஜய்
மீது போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். குறிப்பாக சூர்ய பிரகாஷ், அஜய் ஆகியோரிடம் இருந்து 2 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் பிகாம் படிப்பை முடித்த வில்லியம்ஸ் மண்ணடி பகுதியிலிருந்து மெத்தபெடைமைன் போதை பொருளை வாங்கி,
இன்ஸ்டாகிராம் மூலமாக கல்லூரி மாணவர்கள் மற்றும் பார்ட்டிகளுக்கு விற்பனை
செய்து வந்தது தெரியவந்துள்ளது.

Tags :
Advertisement