Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்து, ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர்! நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

12:15 PM Nov 20, 2023 IST | Web Editor
Advertisement

இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்து ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Advertisement

கரூரைச் சேர்ந்தவர் பைக் பாண்டியன்.  இவர் தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மொபட் ரேஸில் பங்கேற்று வருகிறார்.  தொடர்ந்து இவர் விழா காலங்களில் பந்தயத்துக்கு பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனத்தில் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் சென்று சாகசம் செய்து,  அதை செல்போனில் படம்பிடித்து ரீல்ஸ் வெளியிட்டுள்ளார்.  தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்:  அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு 10 இடங்களில் நடந்த எழுத்துத் தேர்வு!

இந்த நிலையில் இவர்  தேசிய நெடுஞ்சாலையில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில், சாகசத்தில் ஈடுபடுவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
Actionkarurnews7 tamilNews7 Tamil UpdatesPolicereels
Advertisement
Next Article