For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குரல் மாற்றும் செயலி மூலம் பேராசிரியர் போல் பேசி அட்டூழியம்! 7 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது!

09:11 PM May 25, 2024 IST | Web Editor
குரல் மாற்றும் செயலி மூலம் பேராசிரியர் போல் பேசி அட்டூழியம்  7 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது
Advertisement

மத்தியபிரதேசத்தில் குரல் மாற்றும் செயலி மூலம் கல்லூரி பேராசிரியர் போல பேசி 7 பழங்குடியின சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். 

Advertisement

மத்திய பிரதேச சிதி மாவட்டத்தில் 30 வயது நபர் ஒருவர் குரல் மாற்றும் செயலி மூலம் பேராசிரியர் போல பேசி 7 பழங்குடியின சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் பிரஜேஷ் பிரஜாபதி கூறுகையில்,

குற்றாவாளியை கைது செய்துள்ளோம். அவனுக்கு உதவிய மேலும் இரண்டு பேரையும் கைது செய்துள்ளோம். செல்போனில் குரல்களை மாற்றும் செயலியை பதிவிறக்கம் செய்த குற்றவாளி கல்லூரி பேராசிரியை போல குரலை மாற்றிப் பேசி, ஏமாற்றி இந்த சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிகள் அனைவருமே பழங்குடியினத்தைச் சேர்ந்த மிகவும் வறுமை நிலையில் உள்ளவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

பாதிக்கப்பட்டவர்களில் 4 சிறுமிகள் மட்டும்தான் தைரியமாக முன்வந்து புகார் அளித்தனர். குற்றவாளியிடம் நடத்திய விசாரணையில்தான் மேலும் 3 சிறுமிகளை வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டார். அவருக்கு எதிராக போக்சோ சட்டப்பிரிவின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்படுள்ளது. தொடர் விசாரணையில், இவருக்கு உதவிய ஒருவரிடமிருந்து முதலாவது மாணவியின் செல்போன் நம்பரை பெற்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மாணவிக்கு தொடர்புகொண்டு பேராசிரியர் போல பேசி கல்வி உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியுள்ளார்.

பின்னர் எனது மகன் அழைத்து செல்வான் எனக்கூறி, அப்பெண்ணை ஆள்நடமாட்டமில்லாத வனப்பகுதிக்குள் இழுத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். அதோடுஅப்பெண்ணிடம் இருந்த செல்போன் போன்றவற்றையும் பறித்து கொண்டர்தோடு, அந்த செல்போனில் இருந்த மற்ற மாணவிகளின் எண்களுக்கும் தொடர்புகொண்டு பேசி வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் கடந்த ஜனவரி மாதம் முதல் நடந்திருப்பதாகவும், பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்தபோதுதான் இது வெளிச்சத்துக்கு வந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement