Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரியாணி சாப்பிட அழைத்த தோழி; விருந்து என நினைத்து சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்!

09:50 PM Jul 27, 2024 IST | Web Editor
Advertisement

திருப்பதி அருகே போதை பொருள் கலந்த பிரியாணியை கொடுத்து சக தோழியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய பெண் கணவருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

திருப்பதி நகரில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் பி.எல். இறுதியாண்டு படித்து வரும் இளம்பெண் பிரணவ் கிருஷ்ணா. இவர் தன்னுடன் சட்டக்கல்லூரியில் படித்து வந்த கர்னூலைச் சேர்ந்த தனது தோழியை அவ்வப்போது வீட்டிற்கு அழைத்து செல்வது வழக்கம். அவ்வாறு அழைத்து சென்ற பிரணவ் கிருஷ்ணா, அந்த பெண் சாப்பிடும் பிரியாணியில் போதைப்பொருள் கலந்து கொடுத்து அந்த பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும், அவ்வாறு போதையில் தோழி இருக்கும்போது, ஒரு நாள் பிரணவ் கிருஷ்ணாவின் கணவர் கிஷோர் ரெட்டி மூலம் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய வைத்து, அதனை பிரணவ் கிருஷ்ணா வீடியோவாக எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோ, போட்டோக்களை அந்த இளம்பெண்ணின் சகோதரர் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பி அந்த இளம்பெண்ணை மிரட்டி பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

இவர்களின் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண் திருப்பதி எம்.ஆர்.பள்ளி காவல் நிலையத்தில் நேற்று (ஜூலை 26) புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், போலீசார் கணவன்- மனைவி இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் ஏற்கனவே இதேபோன்று வேறு ஒரு பெண்ணிடம் ரூ.5 லட்சம் வரை பணம் பறித்ததும் தெரியவந்தது.

இவர்கள் வலையில் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருப்பார்கள் என்பதால் அவர்கள் புகார் அளித்தால் அவர்களுக்கு கடும் தண்டனை பெற்று தரப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கணவன், மனைவி இருவரையும் எம்.ஆர்.பள்ளி போலீசார் சிறையில் அடைத்தனர்.

Tags :
Andhra PradeshArrestcoupleLaw studentNews7Tamilnews7TamilUpdatesTirupati
Advertisement
Next Article