For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிறந்து சில நிமிடங்களிலேயே குப்பைத் தொட்டி அருகே வீசப்பட்ட குழந்தை!

02:27 PM Mar 11, 2024 IST | Web Editor
பிறந்து சில நிமிடங்களிலேயே குப்பைத் தொட்டி அருகே வீசப்பட்ட குழந்தை
Advertisement

சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்து சில நிமிடங்களேயான குழந்தையை லாட்ஜ் முன் உள்ள குப்பைத்தொட்டியின் அருகே 17 வயது சிறுமி வைத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

சென்னை திருவல்லிக்கேணி குலாம் மிர்சா சாலை பகுதியில் உள்ள லாட்ஜ் அருகே புதிதாக பிறந்த ஆண் குழந்தை ஒன்று ரத்தத்தோடு கிடந்துள்ளது.  இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த லாட்ஜ் ஊழியர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.  தகவலின் பேரில் திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  விசாரணையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக லாட்ஜில் தங்கி இருந்த 17 வயது பெண்ணுக்கு குழந்தை பிறந்தது தெரிய வந்துள்ளது.

போலீசார் விசாரணையில் மதுரையைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளிகளின் 17 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை என்பது தெரியவந்தது.  அந்த சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி மதுரையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜ்குமார் என்பவர் ஏமாற்றியுள்ளார்.  அதனால் 17 வயது சிறுமி கர்ப்பமானதும் தெரிய வந்தது.

இந்த நிலையில்,  சிகிச்சை மேற்கொள்வதற்காக சென்னை வந்த 17 வயது சிறுமியும் பார்வை மாற்றுத்திறனாளி தந்தையும் திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்தனர்.  இதனையடுத்து நேற்று சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தவுடன் பயத்தில் குழந்தையை லாட்ஜ் அருகில் உள்ள குப்பை தொட்டி அருகே வைத்துள்ளனர்.  இதனையடுத்து குழந்தையை மீட்ட போலீசார், திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் ராஜ்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
Advertisement