For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தனியார் பேருந்து மீது உரசிய கன்டெய்னர் லாரி - படிக்கட்டில் பயணித்த 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு!

11:48 AM Mar 12, 2024 IST | Web Editor
தனியார் பேருந்து மீது உரசிய கன்டெய்னர் லாரி   படிக்கட்டில் பயணித்த 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு
Advertisement
மதுராந்தகம் அருகே தனியார் பேருந்தில் கன்டெய்னர் லாரி உரசி விபத்துக்குள்ளானதில் பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர்.

Advertisement

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை-திருச்சி தேசிய
நெடுஞ்சாலையில் இன்று (மார்ச் 12) காலை தனியார் பேருந்தும்,  கன்டெய்னர் லாரியும் உரசி விபத்துக்குள்ளாகின.  இந்த விபத்தில் பேருந்தின் படியில் தொங்கியபடி பயணித்த மோனிஷ்,  கமலேஷ் உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், 5 க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப் பட்டுள்ளன.  இந்த சம்பவம் குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
Advertisement