Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கூகுள் பே மூலம் ரூ.88,000 மோசடி! மோசடி செய்தவரை ஜார்கண்ட் சென்று கைது செய்த தமிழ்நாடு போலீசார்!!

07:43 PM Oct 31, 2023 IST | Student Reporter
Advertisement

முதியவரிடம் கூகுள் பே மூலம் ரூ.88000  மோசடி செய்தவரை ஜார்கண்ட் மாநிலம் சென்று போலீசார் கைது செய்தனர்.

Advertisement

சென்னையை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது மகளுக்கு கூகுள் பே இணையதளம் மூலமாக பணம் அனுப்ப முயற்சி செய்துள்ளார்.   அப்பொழுது அந்த பரிவர்த்தனை ரத்து செய்யப்பட்டது.   உடனடியாக அவர் கூகுள் பே வாடிக்கையாளர் எண்ணிற்கு தொடர்பு கொண்டு உள்ளார்.   அவர்கள் முதியவரின்  தகவல்களை கேட்டு பெற்றுள்ளனர்.  அதன் பிறகு அவருடைய செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.   அதில் ரூ.88000 வரை டெபிட் ஆகியுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இந்நிலையில் முதியவர்,  அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் இவருடைய வங்கிக் கணக்கிலிருந்து பெறப்பட்ட தொலைபேசி எண்ணை வைத்து டிராக் செய்த பொழுது அந்த தொலைபேசி எண் ஜார்கண்ட் மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது.   உடனடியாக அண்ணாசாலை போலீசார் ஜார்கண்ட் மாநிலம் சென்று மோசடி செய்த முகமது பெலால் (23) என்ற நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் முகமது பிலால் மற்றும் அவரது நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து போலியான வாடிக்கையாளர் மையம் ஒன்றை உருவாக்கி அதில் புகார் தெரிவிப்பவர்களின் தகவல்களை பெற்றுக்கொண்டு அதன் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.   இதனையடுத்து முகமது பிலாலை ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை அழைத்து வந்து அவரிடம் இருந்த இரண்டு செல்போன், ஒரு ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றை பறிமுதல் செய்தவுடன் சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags :
ArrestChennaiCyber crimeFinancial FraudfraudgpayinvestigationMoneyPolicescamTamilNadu
Advertisement
Next Article